யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மாயானத்தில், மனித உடல்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியை குற்றவியல் சம்பவம் நடந்த மனிதப் புதைகுழி எனத் தெரிவித்ததுடன் மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் கட்டளையை பிறப்பித்துள்ளது.
மேலும் இது தொடர்பில் பாதீட்டினை நீதியமைச்சிற்கு அனுப்பி வைப்பதற்கு சட்ட வைத்திய அதிகாரியை சமர்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
வெள்ளிக்கிழமை மதியம் செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதை புதைகுழி விவகாரம் யாழ் நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைகளுக்காக எடுத்து கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் கடமையாற்றும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், தொல்பொருள் தடயவியல் பேராசிரியர்ராஜ் சோமதேவா ஆகியோரின் அபிப்பிராய அறிக்கை நிபுணத்துவ அறிக்கையின் பிரகாரம் மூன்று விதமான விடயங்கள் இருவராலும் முன்வைக்கப்பட்டன.
இதன்போது, குறிக்கப்பட்ட அகழ்வு இடம்பெறும் இடத்தில் 1.6 மீற்றர் அடி அளவிலேயே மனித என்பு எச்சங்கள் அடையாளப்படுத்தக்கூடியதாக உள்ளது எனவும், குழப்பமான சூழலில் மனித என்புக்கூடுகள் புதைக்கப்பட்டுள்ளது எனவும், ஆடைகளோ அல்லது தனிப்பட்ட அணிகலன்களோ குறித்த இடங்களில் காணப்படவில்லை எனவும் எனவே இது சட்டவிரோதமான இரகசியமான புதைகுழியாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில் 17 மனித எலும்புக்கூடுகள் பகுதியளவிலும், 5 மனித எலும்பு கூடுகள் முழுமையாகவும் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் பல மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக இந்தமனித புதைகுழியை அகழவேண்டும் என்ற பரிந்துரை பேராசிரியர் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டதரணியும் இந்தப் புதைகுழி அகழ்வை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில் அவர்கள் அகழ்வு குறித்து திருப்திப்படும் வரையில் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், அது தொடர்பில் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவனின் கோரிக்கையின் அடிப்படையில் சமர்பித்து நீதி அமைச்சினூடாக நிதியினை பெறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும்குறிப்பிடப்பட்டது.
மேலும் தொல்லியல் தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அபிப்பிராய அறிக்கை மற்றும் அகழ்வில் திருப்தியடைவதாக தெரிவித்த நீதிவான் அவரே தொடர்சியான பணிகளை முன்னெடுக்க அனுமதியையும் வழங்கினார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பில்சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா, சட்டத்தரணி வொஷான் மதுசங்கவும் காணாமல்ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பில் சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரனும் ஆஜராகினர்.
இதேநேரம் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் சர்வதேச தராதரங்களுக்கு அமைவாக, போதிய வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும், அதற்கு அவசியமான நிதி உள்ளிட்ட சகல வளங்களையும் அரசாங்கம் வழங்கவேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.
அதேபோன்று இப்பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்படவேண்டும். அதாவது பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் ஊடகங்கள் இதனைப் பார்வையிடுவதற்கும், இதுகுறித்து அறிந்துகொள்வதற்கும் இடமளிப்பதுடன் அகழ்வுப்பணிகள் மற்றும் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் அவர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும்.
மேலும் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதப்புதைகுழி அமைந்துள்ள பகுதியைப் பாதுகாப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அதேபோன்று இப்பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்படவேண்டும். அதாவது பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் ஊடகங்கள் இதனைப் பார்வையிடுவதற்கும், இதுகுறித்து அறிந்துகொள்வதற்கும் இடமளிப்பதுடன் அகழ்வுப்பணிகள் மற்றும் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் அவர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும்.
மேலும் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதப்புதைகுழி அமைந்துள்ள பகுதியைப் பாதுகாப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.